பத்திரிகைகளில் பிரசுரமான சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஒவ்வொரு கதையிலும் மனித நேயமும், அபிமானமும் நிறைந்து இடம் பெற்றிருப்பது சிறப்பாக உள்ளது.
நண்பனின் தங்கை திருமணம் நின்று போக, அவளை திருமணம் செய்ய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுமோ என்ற பதைபதைப்பின் ஊடே பெண்ணின் சொற்கள் ஈரம் கலந்த கனிவு காட்டுவதை, ‘தங்கச்சி கல்யாணம்’ கதை நுட்பமாக படம் பிடிக்கிறது.
வாழ்க்கை நிகழ்வுகளை கதைக் கருவாக அமைத்து, ஒற்றை வார்த்தை தலைப்பு வசீகரிக்கிறது.