திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழி வகையை சுட்டிக் காட்டும் நாவல். வாழ்க்கை பயணத்தில் திருமணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை, 34 அத்தியாயங்களாக விறுவிறுப்புடன் விவரிக்கிறது. காதலால் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள், திருமண பந்தத்தில் பிரிவை சந்திப்பதை அலசுகிறது. மண விலக்கு வழக்குகளை, வக்கீல்கள் அணுகும் விதத்தையும் நடைமுறையுடன் தெளிவாகக் காட்டுகிறது.
ஈகோவை முளையிலேயே கிள்ளாவிட்டால், வளர்ந்து விஸ்வரூபமெடுத்து நிற்கும் என்பதை விளக்குகிறது. பெரும்பாலும் வசனங்கள் வழியாக கதை நகர்ந்தாலும், சுவாரசியத்தை தருகிறது. எதையும் ஏற்றுக் கொள்ளல், வாழ்வை சுலபமாக்கும் என்ற கருத்து ஓங்கி சொல்லப்பட்டுள்ளது.
– ஊஞ்சல் பிரபு