மனித உணர்வுகளின் ஆழத்தை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
விநாயகர் துதியுடன் துவங்குகிறது. ஆன்மிக சிந்தனை கலாசாரத்தை கூறுகிறது. கவிதைகளுக்கான மேடையாக அமைகிறது. மொத்தம் 127 கவிதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான அழகையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன.
சொந்த வாழ்க்கையில், சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் ஆன்மிகம் பங்கு வகிப்பதை பிரதிபலிக்கிறது. கற்பனையைத் துாண்டும் வகையில், ஆழமான செய்திகளை சொல்கிறது.
வாழ்வின் சுயபரிசோதனை ஊற்றாக மலர்ந்துள்ளது. அதிகாரம் மற்றும் வாழ்க்கை நுணுக்கங்களை வெளிப்படையாக உரைக்கும் நுால்.
– வி.விஷ்வா