வாழ்க்கையில் நற்பண்புகளை கடைப்பிடிக்கும் வழிமுறைகளை தெரிவிக்கும் நுால். ஒழுக்கமான நடத்தை பேணுவதில் துவங்கி, 20 தலைப்புகளில் நற்குணங்களை வளர்க்கும் வழிமுறைகளை போதிக்கிறது.
ஒழுக்கத்தை எப்படி வளர்ப்பது, எப்படி தக்க வைத்து கொள்வது என அறிவுரைகளை தருகிறது. திருக்குறளை மேற்கோள் காட்டி எளிமையாக சொல்கிறது. நம்பிக்கை தரும் எண்ணங்களை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை சுட்டிக்காட்டுகிறது. தவறுகளை சரி செய்வது, புகழ்ச்சியை எப்படி எடுத்துக்கொள்வது என்பது பற்றி போதிக்கிறது.
வெறுப்புணர்வை களைவது, லட்சியத்தை மேம்படுத்துவது, அறியாமையை அகற்றுவது, நடுநிலை தவறாமை பற்றி எல்லாம் எடுத்துரைக்கிறது. மேம்பட்ட வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரை நுால்.
– ராம்