முகப்பு » வரலாறு » வாசமுள்ள மலரிது

வாசமுள்ள மலரிது

விலைரூ.80

ஆசிரியர் : ஆ.மலர்தாசன்

வெளியீடு: தெய்வானை பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பூசி மெழுகாமல் அப்பட்டமாக பதிவு செய்துள்ள தன் வரலாற்று நுால். கடந்த காலத்தை வெளிப்படையாக நினைவடுக்கில் இருந்து தகவல்களை பகிர்வது உருக்கமாக உள்ளது.

கிராமத்தில் வறுமை பின்னணியில் பிறந்து, கடுமையாக முயன்று முன்னேறி, அரசியல், பத்திரிகை துறையில் பணியாற்றி உயர்ந்த கதை எழுதப்பட்டுள்ளது. சார்பு இன்றி உண்மை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கிராமத்து நடைமுறை மிக வெளிப்படையாக பதிவாகியுள்ளது.

வாழ்க்கையை நேரடியாக எதிர்கொண்டு, செயல்களுக்கு யார் மீதும் பழி சொல்லாமல் உள்ளது உள்ளபடி உரைக்கப்பட்டுள்ளது. வாழ்ந்த காலத்தை பூசி மெழுகாமல் படம் பிடித்து காட்டுகிறது. வாழ்க்கை போக்கை சலிப்பின்றி வெளிப்படுத்துகிறது. வண்ணம் பூசாத தன் வரலாற்று நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us