யானையை வென்ற எறும்புகள்

விலைரூ.130

ஆசிரியர் : பூபதி பெரியசாமி

வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சிறுவர் மனதில் நட்பையும், அன்பையும், பாசத்தையும் விதைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதுமை சிந்தனைகளை உள்வாங்கி படைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் சுறுசுறுப்பாக சிந்திப்பதில் வல்லவர் என்பதை உணர்த்துகிறது, ‘மூளையுள்ள முகிலன்’ கதை. பிரச்னையை சமாளிக்க முடியாமல் அனைவரும் கைபிசைந்து நிற்கும் போது, குழப்பதை தீர்க்க சிறுவன் சொல்லும் தீர்வு கவனத்தை ஈர்க்கிறது.

மொத்தம், 19 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும்நல்லெண்ணங்கள் ஆழமாய் பதியும் வண்ணம் மையக்கருத்தில் சொல்லப்பட்டுள்ளன. சீரிய சிந்தனையை துாண்டும் வகையில் உள்ளன. அழகிய படங்களுடன் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமியருக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us