சொந்தக்கதை பேசும் நுால்.
முனைவர் பட்டம் கைக்கு கிடைக்க காலதாமதமாகிறது. நேரில் விசாரிக்கப் போகிறார். பெயரைக் கண்டதும் பெண் என நினைத்து, ‘மதிப்பீட்டு அறிக்கை மேலிடத்திலிருந்து வரவில்லை...’ என பதில் கிடைக்கிறது. அப்போதுதான் நண்பர்கள் சொன்னது ஞானோதயமாக கிடைப்பது எழுத்தாகியுள்ளது.
‘பெண் எடுத்த இடத்தில் மூணு நாள் தங்கினது இல்ல. போட்ட நகையையும் புடிங்கிக்கிட்டாங்க...’
‘யார் எக்கேடு கெட்டால் என்ன... நான் மட்டும் வாழ்ந்தால் சரி’
இப்படி நினைப்போர் சார்ந்து, உண்மை சம்பவங்களுடன் எழுதப்பட்டுள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்