முகப்பு » கதைகள் » தினை விளையும் என வினை

தினை விளையும் என வினை விதைத்தவர்கள்

விலைரூ.70

ஆசிரியர் : உடுமலை பழனியப்பன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நல்ல பெயரை வைத்து கெட்ட செயல்களை செய்யும் அரசியல்வாதியின் ஏவல் பற்றிய நாவல்.

பரம்பரை சொத்தாக வந்த தோட்டத்தை, வளர்த்து செழிக்க வைத்து குடும்பத்தைக் காக்கிற சகோதரர்கள். அவர்களை ஏமாற்றி அபகரிக்கும் அரசியல்வாதி. அநியாயத்திற்குத் துணை போகும் அரசு அதிகாரி. ஏமாற்றப்பட்டதால் நிலை குலைந்து போகிற குடும்பம். நொந்து போனவன், உழைப்பில் படித்து, சமுதாயத்தைத் திருத்தி தங்கசாமியாக மாறுகிறான்.

வாங்கிய காசுக்காக, விளைவு பற்றி சிந்திக்காது, எதையுமே செய்யத் துணியும், ஏமாளி மனித பாத்திரங்கள் உள்ளன. கொடுமையை எதிர்த்து மக்கள் துணையுடன் உயர்வது தான் நாவலின் கதை. படிக்கும் போது எழுத்துத் திறமை பிரகாசிக்கிறது.

– டாக்டர் கார்முகிலோன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us