அருந்ததியர் இன மக்கள் வரலாற்றை பல கோணங்களில் ஆராய்ந்து விளக்கி படம்பிடித்துக் காட்டும் நுால். எவருக்கும் புரியக்கூடிய எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தோல் தொழில் செய்யும் அருந்ததியரின் அடையாளத்தை அறியச் செய்கிறது. பெயர் காரணத்தை விளக்குகிறது.
வெவ்வேறு பெயர்களில் நாடு முழுவதும் வாழ்வதை மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களோடு குறிப்பிடுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் செய்யும் தொழில் பட்டியல் உள்ளது. உட்பிரிவுகள் விரிவாக தரப்பட்டுள்ளன.
தீண்டாமை கொடுமையால் அவமதிக்கப்படுவதை விளக்குகிறது. மனித இழிவை தவிர்க்க வலியுறுத்தும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு