ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளில் இருந்து தேர்ந்தெடுத்த கருத்துகளின் தொகுப்பு நுால். கடவுள், மதம், பெண் துறவி, பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் என்ற தலைப்புகளில் விளக்கம் உள்ளது.
மிளகாயை கடித்தால் காரத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது போல், பாவம் செய்தால் அதை அனுபவிக்க வேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி. மனதில் மாசு விலகி விட்டால் இறை அருள் கிடைக்கும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
குழந்தை, தந்தை கையைப் பிடித்து நடந்தால் தவறி விழலாம். தந்தை, குழந்தை கையைப் பிடித்து நடந்தால் பாதுகாப்பு நிச்சயம். அதனால், ஆண்டவனை கூவி அழைத்து கைப்பிடிக்கச் செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துகள் உள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்