கிராம பின்னணியில் உள்ள வாழ்க்கை சிக்கலை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
பிரசவத்துக்காக, மாட்டு வண்டியில் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். ரயில்வே கேட் அடைத்திருந்த நிலையில் வலியில் துடிக்கிறாள். அங்கேயே குழந்தை பெற்று அதிர்ச்சியில் மரணம் அடைகிறாள்.
மனைவியின் மரணத்துக்கு காரணம் ரயில் என்று கணவன் மனதில் பதிவு ஏற்பட்டு வெறுப்படைகிறான். பிறந்த குழந்தை ரயிலை நேசிக்கிறது. பின் ரயில் இயக்கும் தகுதி பெறுகிறது. இதை கதைக்களமாக்கி கிராம பின்னணியில் எழுதப்பட்டுள்ள நாவல் நுால்.
– சீத்தலைச் சாத்தன்