சுற்றுச்சூழல் பற்றி நீண்ட விளக்கங்களோடு புரியும் வண்ணம் எழுதப்பட்டு உள்ள நுால். சூழல் அக்கறை உலக நாடுகள் முழுவதிலும் தோன்ற காரணம் என்ன என்பதை சுவைபட எடுத்துரைக்கிறது.
குப்பை மேலாண்மை பற்றிய தகவல்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. வேண்டாதவற்றை குப்பை என துாக்கி எறிகிறோம். ஆனால், இயற்கையின் அமைப்பில் குப்பை எதுவுமே இல்லை என விவரிக்கிறது. ஒன்றின் கழிவு இன்னொன்றுக்கு உணவு என்பது தான் இயற்கையின் சிறப்பாக சொல்கிறது.
கழிப்பறைகளை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் அமைக்க வேண்டிய அவசியம் சொல்லப்பட்டு உள்ளது. கழிவை உரமாக்கிக் கொள்வது பற்றியும் தெளிவான செய்திகள் உள்ளன. இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை புரிய வைக்கும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்