நல்ல எண்ணங்களை விதைப்பது எவ்வளவு முக்கியமோ, அது போல் தீய எண்ணங்களை உருவாக்கும் செயல்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதை, இஸ்லாம் புனித நுாலான குர்ஆன் வழியாக சொல்லும் நுால்.
மின்னல் பாய்வதால் நிலம் வளமடைகிறது. மின்னல் குறைந்தால் விளைச்சல் குறையும் என்பதை குர்ஆன் கூறியிருப்பதை எடுத்துரைக்கிறது. விண்வெளியில் பயணம் செய்யும் மனிதன் இதயம் சுருங்கும் என கூறப்பட்டுள்ளது. மது, சூதுவின் தீமை விவரிக்கப்பட்டுள்ளது.
பொய் சொல்லும் மரபு, மூளையின் முன்பகுதியான நெற்றியில் உள்ளதாக குர்ஆன் விவரிக்கிறது. பொருள் சார்ந்த வசதிகள் மட்டுமே அமைதியான வாழ்க்கைக்கு போதுமானதல்ல என அறுதியிட்டுக் கூறும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்