கம்யூனிசத்தின் சாதனை பஞ்சம், படுகொலை, பேரழிவு என நிறுவும் நுால்.
உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையை கவலையுடன் குறிப்பிடுகிறது. படுகொலை, பேரழிவு ஏற்படுத்தியதற்கு ஆதாரங்களை முன்வைக்கிறது.
அடிமை முறை, நிலவுடைமை, முதலாளித்துவம், சோஷலிசத்தை வரலாற்று ரீதியாக விளக்குகிறது. இந்த அடிப்படையில் இருந்து கம்யூனிச சிந்தனை வளர்ந்ததை குறிப்பிடுகிறது.
ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் வெற்றிக்கு பின், ஒளிந்து கிடக்கும் படுகொலைகளையும், உருவாக்கப்பட்ட பஞ்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
துாய்மையாக கட்டமைத்த பிம்பங்களையும், அதில் மறைக்கப்பட்ட உண்மையையும் வெளிச்சம் போட்டு காட்டும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்