இனிமை நிறைந்த பாடல்களின் தொகுப்பு நுால். சிறுவர் – சிறுமியர் இசையுடன் பாடி பழக ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இனிமை மிக்க சந்தம் நிறைந்த வார்த்தைகளை கோர்த்து, பாடல்கள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும் சிறுவர் – சிறுமியரின் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து வெளிப்படுத்த உதவும். சுற்றியிருக்கும் சூழலை புரிய வைத்து அறிவூட்டும்.
அம்மா, அப்பா மீது பெரும் மதிப்பு ஏற்படுத்த, ‘பெற்றோர்’ என்ற தலைப்பில் ஒரு பாடல் உள்ளது. அது, ‘அம்மா, அப்பா யாரு... பேரை கொஞ்சம் கூறு... நல்ல பழக்கம் நுாறு... சொல்லும் தங்க தேரு...’ என சுவையுடன் படைக்கப்பட்டுள்ளது. கருத்து மற்றும் குரல் வளத்தை வெளிப்படுத்த உதவும் சந்தப் பாடல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
– மதி