நீரால் ஏற்படும் பேரழிவுகள் குறித்த விபரங்களை தரும் நுால். வரலாற்றுக் குறிப்புகளும் காணப்படுகின்றன.
உலகத்தை ஊழிப் பெருவெள்ளம் அழித்தொழித்தது என்பதை சமயங்கள் மட்டுமல்லாது அறிவியலும் உறுதிப்படுத்துகின்றன. ஏரியில் நீர்ப்பெருக்கால் ஏற்படும் விளைவுகள் விவரிக்கப்பட்டுள்ளது. பூமியில் உள்ளதில், 2 சதவீதத்துக்கும் குறைவாகவே நிலத்தடி நீர் இருப்பதாக குறிப்பிடுகிறது.
மாசுபட்ட குடிநீரால், ஆண்டிற்கு 50 லட்சம் பேர் இறப்பதாக எச்சரிக்கை தகவல் தருகிறது. உலகில் ஏற்பட்ட பெருவெள்ளங்கள் பற்றிய விபரங்களும், பனிச்சரிவுகள் பற்றிய செய்திகளும் உள்ளன. மனித குலத்திற்கு பொறுப்புணர்வை அதிகரிக்க அறிவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– டாக்டர் கார்முகிலோன்