நோயிலிருந்து குழந்தையை பாதுகாத்து வளர்க்கும் முறைகளை கூறும் நுால்.
குழந்தையின் முதல் உணவு, அழுகை, மலம், உறக்கம், எடை, முத்தம் உட்பட பல தலைப்புகளில் வளர்ப்பு முறைகளை அழகாகச் சொல்கிறது. வளர்ச்சி நிலைகள் படிப்படியாக சொல்லப்பட்டுள்ளன. குழந்தையின் முதல் அழுகை மகிழ வைக்கும்; ஒரு வருடம் அதன் மொழியே அழுகைதான். எதற்காக அழுகிறது என கண்டறிய வேண்டும் என்கிறது.
பிறந்ததும் மூன்று கிலோ உள்ள குழந்தை, 1 வயதில் ஒன்பது கிலோ இருக்க வேண்டும். சுகாதாரம், சுத்தம் இல்லாவிட்டால் தொற்று நோய் தாக்க வாய்ப்பு ஏற்படும் என்று விளக்குகிறது. இது போன்ற அறிவுரைகளுடன் கூடவே இருந்து மருத்துவம் செய்யும் தாய் போல் உதவும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்