தொல்லியல் ஆதாரங்கள் அடிப்படையில் தமிழகத்தின் கடந்த காலத்தை காட்டும் நுால்.
தமிழகத்தில் ராஜாக்கமங்கலம், ஆதிச்சநல்லுார், கொடுமணல், அரிக்கமேடு, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் அகழாய்வுகள் நடந்துள்ளன.
வரலாற்றில் நிலைபெற்றுள்ள இந்த ஊர்களில் கண்டெடுத்த தொல்பொருட்கள் குறித்த விபரம் தரப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்திய வரலாற்று தகவல்களை சுவாரசியம் குன்றாமல் எடுத்துரைக்கிறது. இலக்கியச் சான்றுகளும் உரிய வகையில் பொருத்தி காட்டப்பட்டுள்ளன. கால அடிப்படையில் தொல்லியல் ஆவணங்கள் பதிவாகியுள்ளன.
மக்கள் பயன்படுத்திய கருவிகள், மேம்பட்ட வாழ்க்கை முறை, வணிகம் குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளன. தமிழக வரலாற்று செய்திகளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் நுால்.
– மதி