ஜோதிட கணித சாஸ்திர தகவல்கள் நிறைந்த புத்தகம். திருநெல்வேலி, ஸ்ரீ காந்திமதி விலாசம், 1897ல் வெளியிட்டது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஹிந்து சமயத்தை பின்பற்றுவோருக்கு, சூரிய உதயம் முதல் மறுநாள் உதயம் வரை, ஒரு தினம். இஸ்லாமியருக்கு, சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் அஸ்தமனம் வரை ஒரு தினம். ஐரோப்பியருக்கு, நடு இரவு முதல் மறுநாள் நடு இரவு வரை ஒரு தினமாக உள்ளதை தெரிவிக்கிறது.
ஜோசியருக்கான தகுதிகள் விவரிக்கப்பட்டுள்ளது. துாரம், கால அளவு வாய்ப்பாடுகள் தரப்பட்டுள்ளன. மன்வந்திரம், யுகம் பற்றிய செய்திகள் விரிவாக உள்ளன. மாதப்பிறப்பு கணக்கிடுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. பிரமிப்பை ஏற்படுத்தும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்