வீட்டின் பாதுகாப்பு கவசமாக பஞ்ச பூதங்களை அமைத்துக் கொள்ளலாம் என எடுத்துக் கூறும் நுால். வாஸ்து சாஸ்திரத்தை தெளிவாக எடுத்துச் சொல்கிறது. வாஸ்து அமைப்பைப் பொறுத்தே வீடு, கோவில், அரண்மனை சிறப்பு பெறும் என அறிவுரைக்கிறது. வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய நெறிகளை எடுத்துரைக்கிறது. அறை அமைப்பு, பிரம்மஸ்தானம், கிணறு அமைப்பு முறைகளை கூறுகிறது.
மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, கழிவுநீர் தொட்டி, மாடிப்படிகள் வாஸ்துப்படி அமைப்பதை கூறியுள்ளது. பாகப்பிரிவினை செய்யும் முறையும் விளக்கப்பட்டுள்ளது. முக்கிய வாஸ்து குறிப்புகள் தரப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உடையோர் படிக்க வேண்டிய நுால்.
– புலவர் சு.மதியழகன்