பாலின சமத்துவம் சார்ந்த எண்ணத்தை சிறுவர்களுக்கு ஊட்டும் விதமாக உள்ள சிறுகதை நுால்.
ஒரு குடும்பத்தில் தாத்தா, பேரன், அம்மா என்ற மூன்று பாத்திரங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. இதில் இடைநிலையில் உணவு தயாரிப்பு ஒரு கருத்துருவாக மலர்ந்து பாலின சமத்துவ நிலையை வலியுறுத்துகிறது.
எந்த பணியிலும் பேதங்கள் கிடையாது என்பதை நுட்பமாக உணர்த்துகிறது. கதையின் இறுதிப்பகுதி நெகிழ்வு உணர்வை தருகிறது. அதுவே மையக்கருத்தை தாங்கி நிமிர்ந்து நிற்கிறது. எளிய மொழிநடை வாசிப்புக்கு சுவை சேர்க்கிறது. புரிந்துகொள்ளும் வகையில் உரையாடல்கள் மையப்படுத்தப்பட்டுள்ளன.சிறுவர் – சிறுமியர் உற்சாகமாக வாசித்து நவீன வாழ்வை உணர வைக்கப்படும் கதை நுால்.
– ஒளி