மதுரையை தலைநகராக கொண்டு தமிழகத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்த மன்னர் வம்சத்தின் வரலாற்றை சொல்லும் நுால்.
நாயக்கர்களின் பூர்வீகம், இந்த வம்சத்தின் ஆட்சியாளர்கள் குறித்த விபரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. இந்த வம்சத்தினர் நடத்திய போர்கள் பற்றிய விபரமும் தக்க ஆதாரங்களுடன் உள்ளன. கலை, பண்பாடு, இலக்கியம், கட்டுமான துறைகளில் செய்த பங்களிப்புகள் குறித்து தெளிவுபடுத்துகிறது.
மதுரை நகரின் வரலாற்று போக்கை மாற்றியமைத்த மன்னர்களின் நடவடிக்கை, செயல்பாடுகள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம், 16 தலைப்புகளில் விபரங்கள் உள்ளன. மதுரையை மையமாகக் கொண்டு தமிழகத்தை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் பற்றி, ஆதாரங்களுடன் வரலாற்று செய்திகளை அறியத் தரும் நுால்.
– மதி