திருக்குறள் பற்றி பாடப்பட்ட பாமாலைக்கு எளிய விளக்கத்தை எடுத்துக் கூறும் நுால்.
திருக்குறள் பெருமை, பகுப்பமைதி, சிறப்புகளை வெண்பா வடிவில் பாடப்பட்ட பாமாலை சரத்தின் சிறப்புகள் விளக்கங்களுடன் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. வள்ளுவரை கடவுளின் மேலானவராக கருதி புகழ்மாலை சூட்டப்பட்டுள்ளது.
சங்கப் புலவர்களின் சொல் நுட்பம் வியப்பை ஏற்படுத்துகிறது. திருக்குறளின் எளிமை, ஓசை நயம், இலக்கண பதிவு போன்ற பன்முகத் தன்மையை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. கால வரிசையில் திருக்குறள் உரை, உரையாசிரியர் விபரங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. திருக்குறளை விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய நுால்.
– ஊஞ்சல் பிரபு