வாழ்வு சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த வழிகாட்டி நுால்.
மகிழ்ச்சியில் இருக்கும்போது செய்யும் செயல்கள் உயர்ந்த நிலைக்கு செல்லும் என்கிறது. நாலு பேர் நாலு விதமாக பேசுவர் என ஒதுங்கினால், கனவுகளை சாதனையாக்க முடியாது என எச்சரிக்கிறது. பிறர் வெற்றியில் பொறாமை கொள்ளாமல், உங்களால் முடியாவிட்டால் மற்றவருக்கு உதவ பரிந்துரைக்கிறது.
கற்று கொடுப்பவர் யாராகவும் இருக்கலாம்; எதை கற்று கொள்கிறோம் என்ற புரிதல் அவசியம் என அறிவுரைக்கிறது. அதிகாரத்தை குடும்பத்திற்குள் நுழைத்தால், இனிமை காண முடியாது என எச்சரிக்கிறது.
முயற்சியை தடுக்கும் சலிப்பை விலக்க கூறுகிறது. வாழ்க்கையை விஞ்ஞானிகள், அறிஞர்கள், சாதனையாளர்கள் வாழ்வுடன் பொருத்தி கூறும் நுால்.
– டி.எஸ்.ராயன்