குழந்தை வளர்ப்புக்கு என சட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தரும் புத்தகம். குழந்தை திருமண தடுப்பு பற்றி விளக்கமாக சொல்கிறது.
காந்திஜி, மகாகவி பாரதியாருக்கு குழந்தை பருவத்திலே திருமணம் நடந்தது. அதனால் தான், பின் நாளில் குழந்தை திருமணம் முறைக்கு எதிர்ப்பு காட்டினர். இந்த புத்தகமும் அது சார்ந்த கருத்துகளை முன்வைக்கிறது.
குழந்தைகள் நலக்குழு உறுப்பினராக பணியாற்றிய அனுபவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. பெண்கள் தான் வீட்டின் கண்கள். ஜன்னல், கதவு என்று முகஸ்துதி செய்தாலும் குழந்தை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாதீர் என்று அழகாக சொல்கிறது. அது தண்டனைக்குரிய குற்றம் என எடுத்துரைக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்