முகப்பு » வரலாறு » வேலுநாச்சியார்

வேலுநாச்சியார் நாவலில் பெண்ணியச் சிந்தனைகள்

விலைரூ.50

ஆசிரியர் : மு. கீதா

வெளியீடு: திரு பதிப்பகம்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
திரு பதிப்பகம், 5 ஏ போயஸ் சாலை எல்டாம்ஸ் சாலை, சென்னை- 18. (பக்கம்:144)

வீரமிகு பெண்ணுக்கு வடக்கே உள்ள ஜான்சி ராணியைச் சொல்வர். தெற்கே இங்கே வீரமங்கை வேலு நாச்சியாரும் உள்ளார் என்ற வரலாற்று உண்மையை, புதின எழுத்தாளர் ஜீவபாரதி சிறப்பாக நெடுங்கதை ஆக்கியுள்ளார்.பெண்களின் வீரத்தையும், தியாகத்தையும், விவேகத்தையும் இந்த நூலாசிரியர் கீதா அங்கங்கே அளந்து காட்டி-யுள்ளார்.
ஜான்சி ராணிக்கு 77 ஆண்டு முற்பட்டவர் வேலு நாச்சியார். வெள்ளையரை எதிர்த்து தனது கணவர் சிவகங்கை சீமையின் அரசர் முத்து வடுகநாதரைப் பலிகொடுத்து, 8 ஆண்டு தவமிருந்து, ஹைதர் அலி உதவியுடன் வெள்ளையரை விரட்டி, இழந்த நாட்டை மீட்டவர் வேலு நாச்சியார்.
இவர், 1762ம் ஆண்டில் ஆங்கிலேய அதிகாரியிடம் வரி கொடுக்க முடியாது என்று வீராவேசமுடன் ஆங்கிலத்தில் கூறி விரட்டுகிறார். தெலுங்கு, மலையாளம், உருதுவும் பேசத் தெரிந்தவர் வேலு நாச்சியார்.
"என் உயிர் உள்ளவரை சாதியின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட, மண்ணில் சிந்தவிடமாட்டேன். மதம் சாதியை விட மனிதம் மகத்தானது, மனிதர்களை நேசிப்போம்' என்பது போன்ற வீரவரிகள் நம்மை வியக்க வைக்கும் சிறந்த திறனாய்வு நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us