முகப்பு » கட்டுரைகள் » ஐந்து செல்வங்களும்

ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும்

விலைரூ.40

ஆசிரியர் : கி.ஆ.பெ.விசுவநாதம்

வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 112.)

முத்தமிழ்க் காவலர் - ஐந்து செல்வங்கள் என்று உணர்த்துவன யாவை?
தாய்ச் செல்வம், சிந்தனைச் செல்வம், கிழட்டுச் செல்வம், உடற் செல்வம், திருச்செல்வம் ஆகியன.
கல்விச் செல்வம், கேள்விச் செல்வம், அருட்செல்வம், பொருட் செல்வம், அறிவுச் செல்வம், மக்கட் செல்வம் இவற்றை ஆறு செல்வங்கள் என்கிறார். அனுபவ முத்திரை பதிந்த குறிப்புகளையும் தருகிறார்.
கிழட்டுச் செல்வம் என்ற தலைப்பில் அவர் சொல்லும் விழுமிய கருத்துக்கள் இவை. இனி மேல் பாட்டியைக் கிழடு என்று கேலியாகப் பேசாதே. எப்போதும் மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள். கிழடுகள் தாம் நம் நாட்டின் உயர்ந்த செல்வங்கள்! அவர்களிடம் நிறைந்துள்ள அனுபவக் குவியல்கள், எதிர்காலக் கிழடுகளாகிய நமக்கு இப்போது தேவை! மொழி அழகும், கருத்தாழமும் மிகுந்த கட்டுரைகள்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us