கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 17. (பக்கம்: 280)
ஆன்மிகச் சிந்தனைகள் நம் மனம் பண்படைய உதவும் மிகச் சிறந்த சாதனமாகும். நம் முன் னோர்கள் நமக்குச் சொல்லித் தந்த வழியும் அதுவே. நூலாசிரியர், இந்நூலில் பல புதிய கண்ணோட்டங்களைக் கூறியுள்ளார்.
நற்சிந்தனையை வளர்த்துக் கொள்ள ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன் ஆகியோரின் சம்பவங்களைக் கூறுவது (பக். 7) பூனை குறுக்கே வருவதை, கெட்ட சகுனம் என்று எண்ணக் கூடாது என்று கூறுவதுடன், அச்சொல் குறித்த புதிய சிந்தனையைக் கூறுவது (பக். 22) இந்திய மரபையும், பண்பாட்டையும் ராமாயண, மகாபாரத நிகழ்வுகளால் விளக்குவது (பக். 31-34) திருஷ்டி என்ற பெயரில் பூசணிக்காய் உடைப்பது, எலுமிச்சம் பழத்தை துண்டாக்கி சுத்தி, தூக்கி எறிவது ஆகிய பல சிந்தனைகளை 42 கட்டுரைகளில் இந் நூலாசிரியர் கூறியுள்ளது நம் சிந்தைக்குத்தக்க விருந்தாவதுடன், அவரின் எழுத்தாற்றல் கண்டு மகிழ்கிறோம்.
நூலாசிரியரின் பழகு தமிழ்நடை நம்மைக் கவர்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.