இறை வழிபாட்டில் பயன்படுத்தும் விரல் முத்திரைகளின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் நுால். பகவான் அருள் பூரணமாக பெற உதவும் என்கிறது.
விஷ்ணு,
சிவன், கணேசன், சூரியன், ஸ்ரீசக்தி தேவி மற்றும் காளி, மகாலட்சுமி,
சரஸ்வதி, ஸ்ரீதாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி போன்ற தேவதைகளுக்கு உரிய
முத்திரைகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
தியானம்,
யோகப்பயிற்சியில் பயன்படுத்த வேண்டியவை, பஞ்ச பூதங்களுக்கான முத்திரைகள்
குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. காயத்ரி ஜப காலத்தில் காட்டப்படும் 24 வகை
முத்திரைகளும், மந்திரங்களும் பதிவிடப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரப்படி இறைவனை
வழிபட விரும்புவோருக்கு உதவும் நுால்.
– புலவர் சு.மதியழகன்