லேசர் பார்க், கோயம்புத்தூர். (பக்: 346)
படங்களை வரைவதற்கு முன்பெல்லாம் பேனா, பென்சில், ரப்பர், கலர்கள், ஸ்கேல் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உபயோகப்படுத்தினர். ஆனால், இக்காலக்கட்டத்தில் நமது முன்னேற்றத்திற்காக கணினி வல்லுனர்களால் கண்டறியப்பட்டது தான் கோரல் டிரா. கோரல் டிராவில் அனைத்து வேலைகளையும் மிகச்சிறப்பாக செய்து முடிக்கலாம். எழுத்துக்களை உபயோகித்து புதிய வடிவங்களை உருவாக்க முடிகிறது. புதிய உருவங்களை வரைவதற்கும், வரைந்தவற்றை மாற்றியமைப்பதற்கும், கலர் கொடுப்பதற்கும் (டூல் பார்) தேவைப்படுகிறது.
போட்டி மனப்பான்மை மிக்க இக்கால கட்டத்தில் வரைபடம், லோகா, மோனோகிராம் ஆகியவற்றை தயாரிக்க கோரல் டிரா தேவைப்படுகிறது. கோரல் டிராவில் படங்களை வரைவதற்கு மவுஸ் மிகவும் முக்கியமானதாக பயன்படுகிறது. இப்புத்தகத்தில் கோரல் டிராவின் முக்கியத்துவத்தை முழுமையாக விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்.