பாற்கடல் பதிப்பகம், 4/50, நான்காவது தெரு, சபாபதி நகர், மூவரசன் பேட்டை, சென்னை-91. (பக்கம்: 204)
மேடை நாடகமாக அரங்கேறியவற்றை தொகுத்து நக்கீர பூமி என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் வசனங்களாக இடம் பெற்றுள் ளன. சாதாரண மக்களையும் சிந்திக்க வைக்க கூடிய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. சமூகத்தில் நிகழும் அவலங்கள் நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் சிந்திக்க வைக்கும் வகையிலும் விளக்கப் பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் உணர்ச்சி மிகு உரையாடல்களுக்கு இடையிடையே, ஆங்காங்கே மேடை நாடக காட்சிகளும் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன.
புத்தகத்தின் பிற்பகுதியில், குறுந்தொகை-ஐந்திணை ஐம்பது பாடல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நாடகத் தொகுப்பும் இடம் பெற்றுள்ளது.