மாஸ் டைபோகிராபி, 5ஏ, போயஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-600018.
ஆதி சங்கரர் ஸ்தாபித்த நான்கு மடங்களில் தலையாயது சிருங்கேரி. அதை வழிநடத்தும் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்தரின் அருளுரைகள் சிலவற்றை சாரதா ரமணன் தொகுத்திருக்கிறார். குறிப்பாக, ஸ்ரீ பாரதி தீர்த்தர் விஜய யாத்திரை 1986ல் நடந்தபோது, சுவாமிகள் பேசிய பேச்சுக்கள் இதில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
அதில் ஒன்று. "மனிதனுக்கு தான் சிறியதொரு நற்காரியம் செய்தாலும் கூட ""நான் செய்தேன்'' என்ற அகங்காரம் வரும். அந்த அகங்காரம் நிறைய தவறுகளுக்குக் காரணமாகிவிடும். நான் தவறு செய்தால்,என்னை யார் கேட்பார்கள்? எனக்கு எது இஷ்டமோ அதைச் செய்வேன்' என்கிற மனோபாவம் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படை.
இப்படி பல தெளிவான அருளுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.