நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160.)
இந்நூலின் நாயகர் ராமகிருஷ்ணர், குறுகியதோர் ஐம் பது ஆண்டு காலமே (1836- 1886). நம்மிடையே வாழ்ந்தவர்.
புதியதோர் ஆன்மிக சகாப்தத்திற்கு வித்திட்டவரது அமுதமெனும் அருளுரைகள் கங்கை நீரைப் போன்று புனிதமானது, தீஞ்சுவை மிக்கது! மேலும் காலத்தை வென்று நிற்கும் அமரத்துவம் வாய்ந்தது!தீவிர ஆன்மிக வேட்கையுற்றவர்களான நரேந்திரர் (பின்னாளில் சுவாமி விவேகானந்தர்) போன்றவர்களைத் தேடிக் கண்டறிந்து, அவர்களைப் பல்வேறு சோதனைகளுக்குட்படுத்திய பின்னர் பக்குவம் அடைந்த சிஷ்யர்களாக (ஈசுவரகோடிகள்' என்பாராம்)த் தம் வசமாக்கிக் கொண்ட நிகழ்வுகள் சுவைபடக் கூறப்பட்டுள்ளன. மேலும் தமது சொந்த மனைவியை காளி மாதாவாகப் போற்றி வழிபாடு செய்து வந்ததும் மெய்சிலிர்க்க வைக்கிறது. உலக வரலாற்றில் எந்த ஒரு மனிதனும் மகானும் கூட இத்தகைய அருஞ்செயல் புரிந்ததில்லை!இந்நூலின் மூன்றில் இரு பங்கு அவரது வாழ்க்கைச் சரிதையை எடுத்துரைப்பதாகவும், மீதம் அவரது அருளுரைகளின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது. பாலும் தண்ணீருள் கலந்து கொள்ளும். பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண் ணெயோ தண்ணீரில் ஒட்டாது மிதக்கும். ஞானமும் பக்தியும் வெண்ணெய். இல்லறம் தண்ணீர். இப்படிப் பல கருத்துக்கள்.ஆன்மிக வாசகர்களுக்கு கிடைத்துள்ள திரிவேணி சங்கமம்.