Life Bliss Foundation. Nithyanandapuram, off Mysore Road, Bidadi, Bangalore 562 109. Karnataka. (Page: 428)
சுவாமி பரமஹம்ஸ நித்யானந்தர், ஆன்மிக, தார்மீக சொற்பொழிவுகள் செய்து வருபவர். இத்துடன் நிர்வாக மேலாண்மைத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மன அழுத்தம், வேலைப் பளு ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து எவ்வாறு தங்களை விடுவித்துக் கொள்வது என்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இவற்றையெல்லாம் தொகுத்து, ஐந்து தலைப்புகளில் கட்டுரை வடிவில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆ ழமான, அழுத்தமான பல விஷயங்களை எடுத்து விளக்கிச் சொல்ல நிறைய சுவாரஸ்யமான கதைகளையும் ஆங்காங்கே சேர்த்திருக்கிறார்.
வாழ்க்கையை ஆனந்தமயமாக மாற்றிக் கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு இந்தப் புத்தகத்தில் நிறைய யோசனைகள் சொல்லப் பட்டிருக்கின்றன.
உலக நாடுகளில் சுவாமியின் ஆன்மிக மையங்கள் உள்ளன. அங்கெல்லாம் சென்று அடிக்கடி சொற்பொழிவு நிகழ்த்தி வரும் சுவாமிஜியின் உரைகளிலிருந்து பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இந்த நூலைப் படிக்கும்போது உணர்கிறோம்.