முகப்பு » பொது » நான் கண்ட அண்ணா

நான் கண்ட அண்ணா

விலைரூ.150

ஆசிரியர் : எம்.எஸ்.வேங்கடாசலம்

வெளியீடு: தமிழ்க்குடில்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
தமிழ்க்குடில், 8, பெரியார் சாலை, புத்தூர், திருச்சி-17. (பக்கம்: 262.)

அண்ணாவின் "ஹோம் லேண்ட்' ஆங்கில இதழின் துணையாசிரியராகப் பணியாற்றி, சிறந்த மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், ஆங்கிலச் சொற்பொழிவாளர் என்று இன்னும் பலமொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வரும் மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.வேங்கடாசலம், 1956 முதல், 1969 முடிய 12 ஆண்டுகள் அண்ணாவுடன் பழகியதை இந்நூல் வாயிலாக நினைவு கூர்ந்துள்ளார்.
"உத்தமர் காந்தி' மறைந்தபோது அண்ணா ஆற்றிய இரங்கல் உரையுடன் தொடங்கும் இந்நூலில், "திராவிட நாடு கைவிடப்பட்டதா?' "ராஜாஜி பங்கேற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு' "அண்ணாவின் ராஜதந்திர அணுகுமுறை' போன்ற அரிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
யானையைக் "கண்ட' குருடர்கள் கதை போல ஒரு பகுதியை மட்டுமே மக்களுக்குத் தந்துள்ளேன் என்று அடக்கத்தோடு குறிப்பிடும் நூலாசிரியரின் இந்நூலுக்கு, முதல்வர் கலைஞர், நிதி அமைச்சர் க.அன்பழகன் ஆகியோரது அணிந்துரை பெருமைச் சேர்த்துள்ளது. உண்மையான தொண்டனின் உணர்ச்சிகளின் வார்ப்பு இப்படைப்பு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us