சாயீஸ்வரி பப்ளிகேஷன்ஸ், 2 ஏ/2, தாராசந்த் நகர் மெயின் ரோடு, விருகம்பாக்கம், சென்னை-92 (பக்கம்: 192)
பத்திரிகையாளராக பல பிரபலங்களை பேட்டி எடுத்ததை தொகுத்து, நூலை வெளியிட்டுள்ளார் ஆசிரியர். தற்போது ஸ்ரீ சாயி மார்க்கம் என்ற ஆன்மிக பத்திரிகையை நடத்தி வருகிறார். பல்வேறு பிரபலங்களை இவர் எடுத்த பேட்டியை கலை, இலக்கியம், சமூகம், ஆன்மிகம், அரசியல் ஆகிய தலைப்புகளில் தொகுத்து இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாசிடம் எடுத்த பேட்டியில் "திருக்கோயிலே'என்ற பாடல் வரிகளை தெருக்கோயிலே என தவறாக உச்சரித் தது குறித்து கேட்டபோது, "உண்மை தான். தமிழ் சினிமாவும், மொழியும் பழக்கமாகாத சூழலில் அந்த தப்பு நடந்து விட்டது'என, ஜேசுதாஸ் கூறியுள்ள விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுபோல், ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் அளித்துள்ள பேட்டிகள், எப்போதும் படித்து மகிழும் வகையில் பல சுவையான விஷயங்களுடன் இடம் பெற்றுள்ளன. ஆன்மிக அன்பர்கள் ரசித்து சுவைக்கலாம்