சாயீஸ்வரி பப்ளிகேஷன்ஸ், 2 ஏ/2, தாராசந்த் நகர் மெயின் ரோடு, விருகம்பாக்கம், சென்னை-92 (பக்கம்: 96)
ஷீரடி சாயிபாபாவின் மகத்துவம் குறித்து, ஆசிரியர் எழுதியுள்ள கவிதை தொகுப்புகள். ஆழ்ந்த சிந்தனையுடன், தத்துவார்த்தமாக இந்த கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.
"பாபாவிடம் கேட்டேன்; உங்களுக்கும் எனக்குமான பிணைப்பு எது? நம் இருவருக்கும் இடையிலான உறவுதான் என்ன? அதற்கு பாபா,"நான் நூல் கட்டி இழுத்த எத்தனையோ சிட்டுக்குருவிகளில் நீயும் ஒருவன் என்றார்'என எழுதப் பட்டுள்ள வரிகள், பாபா எத்தனை, எத்தனை பேரை ஆசிர்வதிக்கிறார் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
"இப்போதாவது என் அறியாமை கண்களை நீங்களே திறந்து விடுங்களேன் பாபா; முதலில் இதயத்தை திற. பிறகு கண்கள் தானாகவே திறக்கும்'என்று பாபா சொன்னதும் என் கண்கள் குள
மாயின'என்ற கவிதை வரிகள் நெகிழ்ச்சியானவை. சாயிபாபா பக்தர்கள் அவசியம் படிக்க வேண்டிய கவிதைகள் இவை.