கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண்: 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை – 17. மொத்த பக்கம்: 384
தினமலர் - வாரமலர் இதழில், 40 வாரம் தொடராக வெளிவந்த நாவல், புத்தக வடிவில் வெளியாகியுள்ளது.
"மோக வில்' நாவல் – க்ளீவ்லேண்டில் நடந்த ஒரு இசை விழாவில் ஆரம்பித்து, அடுத்த வருட க்ளீவ்லேண்ட் விழாவிலேயே முடிகிறது.
கணேஷ் – கதாநாயகன்,
தீபிகா – கதையின் நாயகி,
இவர்கள் இருவரையும் சுற்றி கதை களம் பின்னப்பட்டுள்ளது.
தீபிகா, அமெரிக்க மண்ணில் வளர்ந்தவளானாலும், இந்திய கலாசாரத்தையும், வயலின் இசையை, அதன் நுணுக்கங்களையும் அறிந்தவள்.
கணேஷ் – வயலினில் வித்துவத்தையும், அதன் பரிமாணங்களையும் நன்கு அறிந்தவன். இவர்கள் இருவரும் வாழ் வில் மட்டுமல்ல இசையிலும் இணைகின்றனர். மனைவிக்கு கிடைக்கும் புகழை ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் கதாநாயகன் கணேஷின் மனப் போராட்டமே கதையின் உயிரோட்டம்.
கதாசிரியர் ஏ.நடராஜனை, நவீன சாண்டில்யன் எனலாம். அந்த அளவுக்கு, நாவலில் சிருங்கார ரசம் மிளிருகிறது. இந்நாவல் வாசகர்களின் அபார வரவேற்பை பெறும் என்பது நிச்சயம்.