கார்னே பப்ளிஷர்ஸ்,கூ-7/1 - 2, காவேரி சாலை, பெசன்ட் நகர், சென்னை-90. (பக்கம்: 196 அ-4 அளவு)
தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நாணயவியல் பற்றி அனைத்துலகத் தரத்தில் ஆராய்ச்சி நிகழ்த்தி வருபவர். சங்க காலத் தமிழ் அரசர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்ற கருத்தை மாற்றிச் சங்க காலச் சேரர் (மலையமான்) சோழர், பாண்டியர் காலத்தில் வெளியிட்ட நாணயங்களை அரி தில் முயன்று கண்டுபடித்துத் தம் கட்டுரைகள் மூ லமும் நூல்கள் வழியும் நிலை நாட்டியவர். குறிப்பாகப் பாண்டிய அரசன் பெருவழுதிப் பற்றிய கண்டுபடிப்பு சிறப்பாகச் சுட்டத்தக்கதாகும்.
அண்மையில், பல்லவர் காலத்து வெளியிடப்பட்ட நாணயங்களை ஆராய்ந்து இப்பெரிய நூலை உருவாக்கியுள்ளார். பல்லவர் கால நாணயங்கள் பற்றி முன்பே சில கட்டுரைகள் அயல்நாட்டு அறிஞர்களாலும் இந்திய அறிஞர்களாலும் வெளியிடப்பட்டிருந்த போதிலும் பல்லவர் நாணயம், பற்றித் தனி முழுமையான ஆங்கில நூல் முதன் முதலாகத் தற்பொழுது தான் ஆசிரியர் முயற்சியால் வெளிவந்துள்ளது. இவ்வாய்வை நிகழ்த்த இவர் பல காலம் தொகுத்து வந்த நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகத் தென்பெண்ணை, அமராவதி ஆற்றங்கரை ஓரங்களில் கண்டறியப்பட்ட நாணயங்கள் இவர் தம் ஆராய்ச்சிக்கு மிகப் பயன்பட்டுள்ளன. அன்றியும் லண்டன், கொழும்பு, புதுடில்லி, சென்னை அருங்காட்சியகங்களுக்கு நேரில் சென்று தம் ஆய்வை முழுமைப்படுத்தியுள்ளார். இவ்வாராய்ச்சி நூல் கி.பி.4ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை பல்லவர்களைப் பற்றிப் பொது அறிமுகத்தை முதலில் நிகழ்த்துகிறது. முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் ஆகியோர் நிரல்பட அறிமுகப்படுத்தப் பெறுகின்றனர். இவ்வறிமுகத்தைத் தொடர்ந்து பல்லவர் நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது. இவ்வாராய்ச்சி பக்கம் 41 முதல் 167 வரை அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து மிக அரி ய செய்திகள் அடங்கிய நான்கு பின்னிணைப்புகள் இடம் பெறுகின்றன.பல்லவர் கால நாணயங்களை அறிமுகப்படுத்தும்போது நாணயத்தின் இரு பக்கங்களும் படங்களுடன் தனித்தனியாக அச்சிடப் பெற்றுள்ளன. அதை ஒட்டித் தனியே வரையப் பெற்ற கண் பிரதியும் அச்சிடப் பெற்றுள்ளது. ஆக, ஒவ்வொரு நாணயம் பற்றியும் துல்லியமாக அறியத் தெளிவாக இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நாணயப் படத்திற்கு முன்பும் நாணயம் உருவாக்கப்பட்ட உலோக விவரம், அதன் அளவு, எடை, முன்பக்கமும் பின்பக்கமும் அமைந்துள்ள உருவங்கள் பற்றிய விவரம், நாணயம் கிடைத்த இடம் ஆகியன நிரல்பட வழங்கப் பெற்றுள்ளன. நாணயங்களில் பொறிக்கப் பெற்றுள்ள உருவங்களான காளை, சிங்கம், யானை, குதிரை, பன்றி, மரம், கப்பல், ஸ்வஸ்திகம், சக்கரம், பறை, மீன், சங்கு முதலான சின்னங்கள் பற்றியும், அவற்றை ஒட்டித் தம் ஆராய்ச்சியையும் நிரல்பட நிகழ்த்தியுள்ளார். நாணயங்கள் சிலவற்றுள் பல்லவர் கிரந்த எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ள சொற்களையும் அரிதில் முயன்று, படித்து விளக்கம் நல்கியுள்ளார்.இவர் தம் விளக்கங்களில் குறிப்படத்தக்க சில செய்திகள் நம் கவனத்திற்கு உரி யவை:1. தொடக்கக் காலத்தில் பல்லவர் நாணயங்கள் ஈயத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பத்தளை, செம்பு ஆகியவற்றாலும் வெளியிடப்பட்டுள்ளன. நில இயலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர் என்பதால் பல்லவர் நாணயத்தை அச்சிடப் பயன்படுத்தியுள்ள உலோகங்களை ஆழமாக ஆராய்ந்து அரி ய செய்திகளையும் வழங்கியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது:
1. தொடக்க கால ஈய நாணயங்களில் குரோமியம் இல்லாதிருப்பதும் வெள்ளித்தன்மை உடைய வெண்ணாகம் (Vanadium), இருப்பதும் இவர் தம் ஆராய்