புத்தொளி பதிப்பகம், சென்னை-600 001. (பக்கம்: 166).
இறைத் தூதர்களின் போதனைகளை நிந்தித்த யூத கிறிஸ்தவர்களை விட ஜெருசலம் நகரத்திற்கு முஸ்லிம்களுக்கே உரிமை உள்ளது என்ற கருத்தை வலியுறுத்தி 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றுச் சுவடுகளை, ஆதாரங்களை ஆசிரியர் இந்நூலில் வரைந்துள்ளார்.
இறைத் தூதுவர்களின் நகரம் ஜெருசலம். ஜெருசலத்தின் உமர் (ரஸி), சிலுவை யுத்தத் தொடக்கம். சிலுவைப் படையினரின் அரசாட்சி, அவ்வாட்சியை எதிர்த்த மாவீரர் இமாதுத்தின் ஜன்கி, நூருத்தீன் ஜன்கி, ஸலாஹீத்தின் அப்யூபியின் எழுச்சி, அதைக் கைப்பற்றல், மூன்றாம் சிலுவை யுத்த ஆரம்பம், ஐரோப்பாவில் இருந்து வந்த சிலுவைப் படை ஸலாஹீத்தின் மரணத்திற்கு பிறகு பாலஸ்தீனம், மங்கோலியரின் காட்டு மிராண்டித்தனம், மங்கோலிய தர்த்தாரியர்களின் படுதோல்வி என 14 அத்தியாயங்களில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.வரைபடம், பாலஸ்தீன புகைப்படம் இடம் பெற்றுள்ள இந்நூல் வரலாற்றை கற்க, ஆராய விரும்புபவர்களுக்கு உதவிக-மாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.