காமதேனு பப்ளிகேஷன்ஸ், ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 116)
அரசியல், நாடகம், ஓவியம், கல்வி, சினிமா போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 18 தலைவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. கட்டுரையாளரால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, தற்போது நூலாக்கம் பெற்றுள்ளது.
ராஜாஜி, வ.உ.சி., நாமக்கல் கவிஞர், டாக்டர் ராமசாமி ஐயர், கல்கி, மு.வ., அண்ணாமலை செட்டியார், எஸ்.வி.வி., கொத்தமங்கலம் சுப்பு, தமிழ்வாணன் உள்ளிட்ட 18 பேரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை அவர்களின் வழித்தோன்றல்களின் வழியாகக் கேட்டு கட்டுரைகளை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர்.
மறைந்த அறிஞர்களின் மறக்க முடியாத சில நிகழ்வுகள் இந்த நூலின் சிறப்பு.