திருக்குறள் கருத்துகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த நுால்.
அறிஞர்களின் அறிவுரை பாதுகாப்பாக வாழ்வதற்கு உதவும் என கூறுகிறது. குறளை பெருமைப்படுத்தும் அமைப்புகள் பற்றிய விபரங்களை தருகிறது. எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளுவர் கருத்தை விளக்குகிறது. உடல், உள்ளம் துாய்மை பற்றி தெளிவுபடுத்துகிறது. மனத் துாய்மையே சிறந்த அறம் என்கிறது.
நிலையாமை பற்றிய தெளிவான கருத்தை தருகிறது. உண்மை தன்மையை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறது. ஆட்சி அமையும் வழிமுறையை தெளிவுபடுத்துகிறது. முயற்சியால் வெற்றி அடைய முடியும் என கூறுகிறது. திருக்குறள் படிக்கும் ஆவலை துாண்டும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்