விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை-2. (பக்கம்:144).
தமிழருவி மணியன் சிறந்த கல்வியாளர்; மிகச் சிறந்த சிந்தனையாளர்; இத்துடன் பேச்சாற்றல் நிரம்பப் பெற்றவர். அண்மைக்காலமாக அவருடைய எழுத்துக்களைப் படிக்கும் போது அவருடைய எழுத்து வண்மையின் பரப்பும் தெரிகிறது. ஒரு தலைமுறையின் ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறை, தர்மம் ஆகியவை தடம் தவறி சென்று கொண்டிருப்பதாக, அனுபவம் நிறைந்த சில சான்றோர்கள் வேதனைப்படுவதுண்டு. அந்த தலைமுறையினருக்கு நமது தொன்மைச் சிறப்பை, பண்பாட்டுச் சீர்மையை, கலாசார மேன்மையை, அவர்கள் புரிந்து கொள்ளும் வழியிலேயே எடுத்துச் சொல்லக்கூடிய திறமைசாலிகள் தேவை எனப் பலர் கருதுவதுண்டு. தமிழருவி மணியனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படிக்கையில் அந்த ஏக்கம் முடிவிற்கு வருகிறது.