சாதாரண மனிதர் குணாதிசயங்களை மையப்படுத்தி படைக்கப்பட்ட துப்பறியும் நாவல். பிரபல நடிகர் வீட்டில் நடக்கும் கொலையுடன் துவங்கும் கதையில், அடுத்தடுத்த திகிலுாட்டும் காட்சிகள் ஆர்வத்தைக் கூட்டுகிறது.
தற்கொலை, கொலையாக மாறும்போது காவல் துறை விசாரணை போக்கை விவரிக்கிறது. பாசம், அன்பு, நகைச்சுவை, கோபம், கொடூரம் போன்ற குணங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை கூறுகிறது. தம்பதி, காதலர்கள் கொஞ்சலில், இளமை துளிர்க்கிறது.
தண்டனைக்குப் பின் சிந்திப்பதால் பயன் இல்லை என்கிறது. பல குணாதிசயங்களை சொல்லும் நுால்.
– டி.எஸ்.ராயன்