விலைரூ.140
புத்தகங்கள்
Rating
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை. (பக்கம்:158,
பாரதிக்கு சிந்து, புகழேந்திக்கு வெண்பா என்ற வரிசையில் இறையன்புக்கு புதுக்கவிதை என்று நிறுவனப்படுத்தும் வகையில், இந்த குறுங்காப்பியத்தை புதுக்கவிதை நடையில் எழுதியிருக்கிறார் இறையன்பு. ஒரு இளைஞரின் கனவு, வாழ்க்கை அனுபவம், காதல், தோல்வி, கல்வி, சமூகத்துடன் இரண்டறக் கலப்பதில் நிகழும் ரசாயன மாற்றங்கள் என, ஒரு சுவையான நவீனத்தைப் படிக்கும் அனுபவம் வாசகனுக்குக் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காவியம் இது.பாசாங்கும் பொய்மைப் பூச்சும் இல்லாமல், சொல்லலங்காரமும் பொருளற்ற வார்த்தைப் பின்னல்களும் இல்லாத, இந்த புதுக்கவிதைத் தொடரைப் படிக்கும் போது சுகமான மலையடிவாரப் பயணத்தை மேற்கொள்வது போல இருக்கிறது. இறையன்புவின் எழுத்துக்கள் பிறக்குமிடம் ஆன்மா போலும். புதுக்கவிதை ரசனை உள்ளவர்களுக்கு இது கல்கண்டு.
வாசகர் கருத்து
- ,
sirantha puthagam
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!