குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் எனப் பெரியோருக்கு அறிவுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். கொரோனா தொற்று காலம், கோடை விடுமுறை போன்ற விடுமுறை அல்ல. பள்ளிகள் செயல்படாமல் இருந்த அந்த காலத்தை விடுமுறை என்று சொல்ல முடியாது.
இதை ஒரு போர்க் காலம் என்று, அதாவது மருத்துவப் போர்க்காலம் என்று சொல்லலாம் என விளக்கம் தருகிறது. மாணவர்களிடம் கேள்விகள் எப்போதும் நிரம்பிக் கிடக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு சரியான விடைகள் வழங்கப்படாததாலே மவுனமாகிப் போகின்றன. குழந்தைகளைப் பற்றி அறிந்து, உரிய முறையில் கற்பிப்பதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்