வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, சென்னை-17. (பக்கம்: 280,)
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும், கம்பன் இசைத்த கவி எலாம் நான் என்றெல்லாம் பாரதியால் போற்றப்பட்ட சிறப்பினை எடுத்துக்காட்டி கம்பனுக்காக இன்று வரை யார் யாரெல்லாம் பாடுபடுகின்றனர் என்பதைப் பட்டியலிட்டு வளமையான அனுபவ அறுவினை ஆழ்ந்த சொற்றொடர்களுடன் இழையோடச் செய்துள்ளார் நூலாசிரி யர். 56 கட்டுரைகள். வந்தணைந்த வரவுகளாக குகன், சுக்ரீவன், வீடணனையும், துளசியை விடக் கம்பன் செய்த உத்தி நேரிதாக உள்ளது குறித்தும், தேவ தேவீ ஸர்வ பூத ஸம்ஹார காரி ஹே என்று படைப்பின் மருமத்தில் பஞ்ச பூத சக்திகள் பற்றி வெளிப்படுத்தும் போதும் ஆசிரியரி ன் பரந்த படிப்பறிவு முத்திரைப் பதிக்கிறது. அமரர் ஏவி.எம்.அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு நூலான இது கம்பனைப் பற்றி அறிந்து கொள்ள விழைபவர்களுக்கும், இலக்கிய சுவைஞர்களுக்கும் திகட்டாத தேனமுது.