அன்றாட வாழ்வில் அறிவியலின் பங்கை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கு இந்நூல் மிகவும் பயன்படும்.மழைத் துளிகள் மின்சாரத்தை உண்டாக்குகின்றனவா? அல்லது மின்னல் வடிவில் தோன்றும் மின்சாரம் மழைத் துளிகளை உண்டாக்குகின்றதா? ஆறுகள் ஏன் வளைந்து - வளைந்து ஓடுகின்றன? போன்ற எளிமையாகத் தோன்றும் கேள்விகளுக்கு ஆசிரியர் விஞ்ஞான ரீதியாக விடை தரும் பாங்கு அருமை!