தொகுப்பு: கே.வி.ராமநாதன். விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை2. (பக்கம்: 325.)
தீரர் சத்தியமூர்த்தி, கர்மவீரர் காமராஜரின் சுதந்திரப் போராட்ட காலத்தில் அவருடைய நாவண்மையை, பிரிட்டிஷார் உட்பட அனைவரும் பாராட்டியிருக்கின்றனர். தமிழகத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அந்த நாட்களில் வழிநடத்திச் சென்ற மிக முக்கியமான தலைவர்.
இவர் பேச்சும் எழுத்தும் காரசாரமாக இருக்கும். அன்றயை ஆட்சியாளர்கள், கட்சித் தலைவர்கள், நண்பர்களுடன் இவர் பொதுப் பிரச்னை பற்றி செய்துகொண்ட கருத்துப் பரிமாற்றங்களை அவருடைய கடிதங்களைப் படிக்கும்போது நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆங்கிலத்தில் அமைந்திருந்த இந்தக் கடிதங்களைத் தொகுத்து கே.வி.ராமநாதன் உதவியுள்ளார். இவற்றை அழகு தமிழில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார் சாருகேசி. பெருந்தலைவர் காமராஜரின் குருநாதர் என்பதே மிகப் பெரும் தகுதியல்லவா? நல்ல நூல் படிக்க வேண்டிய புத்தகம்.