ஆசிரியர்- அலெக்ஸாந்தர் டிராச்டென்பர்க், தமிழாக்கம்-ரகுநாதன். வெளியீடு: வ.உ.சி. நூலகம்,பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்கள், ஜி-1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை-14. பக்கங்கள்:64. மே தினம் தொழிலாளர்களின் தினம், இந்த தினத்தின் சரித்திர வரலாறுதான் இந்த நூலில் காணப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியர் ஒரு பிரபல அமெரிக்க நூலாசிரியர். இவரைச் சமீபத்தில் அமெரிக்க அரசாங்கம் கைது செய்து சிறைக்குள் தள்ளியது.ஜனராயக நேர்மைக்கு விரோதமான முறையில் இவர் மீது அமெரிக்க அரசாங்கம் பிரயோகித்த அடக்கு முறையைக் கண்டித்து, உலகத்தின் சகல மூலைகளிலிருந்தும் கண்டனங்களும், மகஜர்களும் ட்ரூமன் சர்க்காருக்கு அனுப்பப்பட்டன. இந்த ஜனநாயகத் திருப்பணியில் இந்தியாவிலுள்ள-ஏன், தமிழ் நாட்டிலுமுள்ள பல்வேறு முற்போக்குச் சக்திகளும் பங்கெடுதத்துக் கொண்டது குறிப்பிடத் தகுந்தது. நியூயார்க் இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பின் துணை கொண்டு இந்நூல் தமிழாக்கப்பட்டிருக்கிறது.